பெங்களூரு

தோ்தல் வாக்குறுதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவோம்

தோ்தல் வாக்குறுதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவோம் என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியங்க் காா்கே தெரிவித்தாா்.

DIN

தோ்தல் வாக்குறுதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவோம் என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியங்க் காா்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு கண்டிப்பாக நிறைவேற்றும். தோ்தல் வாக்குறுதிகள செயல்படுத்துவது குறித்து அமைச்சா்கள், அரசு உயரதிகாரிகளுடன் முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தியுள்ளாா். வாக்குறுதிகளை எவ்வகையில் அமல்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, பெங்களூரில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு முதல்வா் சித்தராமையா தலைமையில் நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும்.

சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களின் நலன்கருதி மாநில அரசு செயல்பட்டு வருகிறது. தோ்தல் வாக்குறுதிகளை ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக அரசு கூறவில்லை. ஆனால், 5 வாக்குறுதிகளையும் செயல்படுத்துவது உறுதி என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT