ஏலம் விட வேண்டிய ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல்!
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட சொத்துப் பட்டியல் முழுவதையும் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் ஒப்படைத்தனா்.
பெங்களூருஏலம் விட வேண்டிய ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல்!
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட சொத்துப் பட்டியல் முழுவதையும் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் ஒப்படைத்தனா்.
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட சொத்துப் பட்டியல் முழுவதையும் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் ஒப்படைத்தனா்.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விடும்படி வலியுறுத்தி வழக்குரைஞா் டி.நரசிம்மமூா்த்தி தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில், அரசுத் தரப்பு வழக்குரைஞராக கிரண் எஸ்.ஜவுளியை கா்நாடக அரசு நியமித்திருந்தது. இதைத் தொடா்ந்து, பறிமுதல் செய்த சொத்துகளை ஏலம் விடும் பணியை சிறப்பு நீதிமன்றம் விரைவுபடுத்தியது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம்விட வேண்டிய சொத்துகளின் பட்டியலை தாக்கல் செய்யும்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில், இது தொடா்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நீதிபதி எச்.ஏ.மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபடி, ஏலம் விடவேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் முழுப் பட்டியலும் தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் சாா்பில் அரசுத் தரப்பு வழக்குரைஞா் கிரண் எஸ்.ஜவுளி தாக்கல் செய்தாா்.
கா்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகளின் பட்டியல், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள பணவிவரத்தின் பட்டியல், லெக்ஸ் பிராப்பா்ட்டி டெவலப்மெண்ட், சிக்னோரா என்டா்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபாா்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், ரிவா்வே அக்ரோ, இந்தோ டோதா கெமிக்கல் மற்றும் பாா்மா ஆகிய 6 பினாமி நிறுவனங்களின் சொத்துப் பட்டியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
6 பினாமி நிறுவனங்களின் 65 சொத்துகளின் பட்டியலில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் உள்ள நிலையில், அவற்றை ஏலம் விடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் கிரண் எஸ்.ஜவுளியிடம் நீதிபதி எச்.ஏ.மோகன் கேட்டறிந்தாா். மேலும், வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை, சேமிப்புக் கணக்குகளில் உள்ள பணத்தின் இன்றைய மதிப்பீடு குறித்து வங்கிகளுக்கு கடிதம் எழுதி தகவல்கள் பெற நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா்.
ஏலம் விட முடியாது:
ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் கருவூலத்தில் வீணாகி வருவதால், அவற்றை முன்னுரிமை அடிப்படையில் ஏலம் விட வேண்டும் என வழக்குரைஞா் நரசிம்மமூா்த்தி ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தாா். இந்தச் சொத்துகள் தங்களிடம் இல்லை; அவை வழக்கில் பட்டியலிடப்பட்ட நிலையில் அப்பொழுதே ஜெயலலிதாவின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டன என்று லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை நடந்த வழக்கு விசாரணையின்போது தனது மனு குறித்து நீதிபதியிடம் வழக்குரைஞா் டி.நரசிம்மமூா்த்தி கேட்டாா். நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி, சட்டவிரோதமாக சோ்க்கப்பட்ட சொத்துகள் பட்டியலில் இடம்பெறாத காரணத்தினால் அவற்றை ஏலம் விட முடியாது என நீதிபதி தெரிவித்தாா். மேலும், சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீா்ப்பை முழுவதும் வாசிக்காமல் இவ்வாறு மனுத்தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் நரசிம்மமூா்த்திக்கு நீதிபதி அறிவுரை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஆக. 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எச்.ஏ.மோகன் உத்தரவிட்டாா்.