முகப்பு
சென்னை

கேரளத்துக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி, கலர் டி.வி. கடத்தல்

போடி, ஜூன் 9: தேனி மாவட்டம், போடி பகுதியிலிருந்து கேரள மாநிலத்துக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி, இலவச கலர் டி.வி. கடத்தப்படுகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:14 PM
பகிர்:

போடி, ஜூன் 9: தேனி மாவட்டம், போடி பகுதியிலிருந்து கேரள மாநிலத்துக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி, இலவச கலர் டி.வி. கடத்தப்படுகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ரேஷன்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ. 1-க்கு 1 கிலோ அரிசியை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால், ரேஷன் கார்டு வைத்துள்ள பலர் இதனை  வாங்கிப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.

 இதனால், இந்த குடும்ப அட்டைதாரர்களின் பெயர்களில், சில ஏஜெண்டுகள் ரேஷன் அரிசியை கடைகளில் இருந்து மொத்தமாக வாங்கி, அவற்றை கேரள மாநிலத்துக்கு கடத்துகின்றனராம்.

அங்கு ரேஷன் அரிசி சுத்தப்படுத்தப்பட்டு, கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும்,அரவை மில்லுக்கு அரிசியை அனுப்பி மாவுப் பொருளாக மாற்றி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனராம்.

 தினமும், போடி பஸ் நிலையத்திலிருந்து மூட்டை, மூட்டையாக அரசு பஸ்கள், தனியார் வேன்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

அரசு பஸ்களில் இலவச கலர் டி.வி.களும் கடத்தப்படுகின்றனவாம்.

அதிகாரிகள் சோதனையிட வரும்போது, அரிசி மூட்டைகளின் மேல்புறம் காய்கறிகளை வைத்து மறைத்து விடுகின்றனராம். இதேபோல, கலர் டி.வி. உள்ள பெட்டிகளில் தெர்மாகோல் எனப்படும் பஞ்சுகளை அகற்றிவிட்டு, மிட்டாய் பாக்கெட்டுகளை அடுக்கி விடுவதாகக் கூறப்படுகிறது.  போடி பஸ் நிலையத்தில் சோதனை நடக்கும்போதெல்லாம், கடத்தல்காரர்களுக்கு முன்னதாகவே தகவல் போய் சேர்ந்துவிடுகிறதாம். இதனால் அரிசி மூட்டைகளை  மட்டும் கைப்பற்றுகின்றனர். கடத்தல்காரர்கள் தப்பி விடுகின்றனர்.

20 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்: இந்நிலையில, போடி பேருந்து நிலையத்தில், புதன்கிழமை பகலில் வட்ட வழங்கல் அலுவலர் ஷேக் அயூப், உதவியாளர் முத்துராஜ், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த  20 மூட்டை ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. அவற்றைக் கடத்தியவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று கடத்தல்காரர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால், ரேஷன் அரிசிக் கடத்தல் தொடர்ந்து நடக்கிறது.

போடி பஸ் நிலையத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி  கடத்தப்படுவது குறித்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் விசாரித்தபோது, அவர்கள் கூறுகையில், ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

முன்பு வருவாய்த்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அது முழுமையாக போலீஸôரிடம் ஒப்படைக்கப்பட்டு, போலீஸôரே சோதனை நடத்துகின்றனர்.

பஸ் நிலையத்தில் அதிகாரிகளைப் பார்த்தவுடன் ரேஷன் அரிசியை போட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தலைமறைவாகி விடுகின்றனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

ரேஷன் அரிசி கடத்துவோர் பிடிபட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து அரசு பஸ்களிலும், தனியார் வேன்களிலும் ரேஷன் அரிசி, கலர் டி.வி.களை கேரள மாநிலத்துக்கு  கடத்துவதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.