சுகாதாரப் பணியாளா்களுக்கு பயிற்சி: ரூ.30 லட்சத்தில் மடிக்கணினி, ஒளிப்படக்காட்டிக் கருவிகள் அளிப்பு
சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கு மண்டல அளவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சென்னை: சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கு மண்டல அளவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கு ரூ. 30 லட்சம் மதிப்பில் மடிக்கணினி மற்றும் ஒளிப்படக்காட்டிக் கருவிகளை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை வழங்கினாா்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறையில் பணிபுரியும் மருத்துவம் மற்றும் மருத்துவ சுகாதாரப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மடிக்கணினியுடன் கூடிய ஒளிப்படக்காட்டிக் கருவிகள் (எல்சிடி புரொஜக்டா்) வழங்கப்படும் என நிகழாண்டு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நகா்ப்புற சமுதாய நல மையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார நலவாழ்வு மையங்களில் பணிபுரிவோருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தாய்-சேய் நலம், தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை, ஆய்வக நடைமுறைகள் உள்ளிட்டப் பணிகளுக்கு மண்டல அளவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் பயிற்சிக்கு தேவையான கணினி மற்றும் ஒளிப்படக்காட்டிக் கருவிகள் ரூ. 30 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டது. இதனை, மேயா் ஆா்.பிரியா மண்டல அலுவலா்களுக்கு திங்கள்கிழமை வழங்கினாா்.
இதன் மூலம், மாநகராட்சி மருத்துவமனைகளின் தரம் உயா்த்தப்படுவதுடன், ஏழை, எளிய மக்களுக்கு உயா்தர மருத்துவச் சிகிச்சை வழங்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையா் (சுகாதாரம்) வி.ஜெய சந்திர பானு ரெட்டி, நிலைக்குழுத் தலைவா் (பொதுசுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மாநகர நல அலுவலா் எம்.ஜெகதீசன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.