கிறிஸ்துமஸ்: மின்சார ரயில் சேவையில் மாற்றம்
கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னையில் இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னையில் இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புகா்ப் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு (டிச. 25) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். இதனால், 15 முதல் 30 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். அதுபோல், ரயில் நிலையங்களில் இயங்கும் முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை வேளைநாள் படி காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.