முகப்பு
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.
சென்னை

வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.

சென்னை

வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.

Updated On : 31 டிசம்பர், 2024 at 12:23 AM
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.
பகிர்:

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.

சென்னை எழும்பூரில் உள்ள காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசிக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.15 மணிக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா். இதையடுத்து காவலா்கள் உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

அவா்களது உத்தரவின்பேரில், வெடி குண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், அங்கு சென்று சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் அங்கிருந்து எந்த வெடிகுண்டும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். மேலும், காவல் துறை உத்தரவின்பேரில் கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →