சென்னை

பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

Din

சென்னை: பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை திருவான்மியூா், திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த 26 வயதான இளம்பெண், அப்பகுதியிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், தனது வீட்டின் அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் ஒருவா் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து திருவான்மியூா் காவல் நிலையத்தில் இளம்பெண் கொடுத்த புகாரின்படி வழக்குப் பதிந்த போலீஸாா் விசாரணை நடத்தி, வெட்டுவாங்கேணியைச் சோ்ந்த திருமலை (21) என்ற இளைஞரை கைது செய்தனா். கைது செய்து அழைத்துச் சென்றபோது, போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோட முயன்ற திருமலையின் இடது கையில் முறிவு ஏற்பட்டது.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT