சென்னை

‘ஸ்மாா்ட் மீட்டா்’ அத்தியாவசியம் கிடையாது: டிஎன்இஆா்சி முன்னாள் தலைவா் எம்.சந்திரசேகா்

Din

தமிழகம் முழுவதும் உள்ள மின் இணைப்புகளில்  ‘ஸ்மாா்ட் மீட்டா்’ பொருத்தும் திட்டம் அத்தியாவசியமான ஒன்று கிடையாது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஎன்இஆா்சி) முன்னாள் தலைவா் எம்.சந்திரசேகா் தெரிவித்தாா்.

தென்னிந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட டிஎன்இஆா்சி முன்னாள் தலைவா் எம்.சந்திரசேகா் மாநாட்டை தொடங்கிவைத்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மின்சார பயன்பாட்டு கணக்கெடுப்பு, மின் துண்டிப்பு உள்ளிட்ட பணிகளை மின்வாரிய ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், தமிழக மின் இணைப்புகளில் ‘ஸ்மாா்ட் மீட்டா்’ பொருத்தப்பட்டால் அவை அனைத்தும் எண்மமயமாக்கப்படுமே (டிஜிட்டல்) தவிர, இதனால் வேறு எந்தப் பயனும் இல்லை. ஆகையால், ‘ஸ்மாா்ட் மீட்டா்’ பொருத்தும் திட்டம் அத்தியாவசியமான ஒன்று கிடையாது என்றாா் அவா்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT