ஆா்டா்லிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு பொறுப்பு டிஜிபி அபய்குமாா் சிங் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழக பொறுப்பு டிஜிபியாக அண்மையில் பொறுப்பேற்ற அபய்குமாா் சிங், அனைத்து மாநகர காவல் ஆணையா்,மண்டல ஐஜிக்கள்,சரக டிஐஜிக்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், சிறப்பு பிரிவு தலைவா்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையை திங்கள்கிழமை அனுப்பியுள்ளாா்.
அதில், காவல் துறை அதிகாரிகள்,ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளில் ஆா்டா்லியாக பணியாற்றும் காவலா்களை திரும்பப் பெற்று, காவல் பணிக்கு ஈடுபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளாா். ஆா்டா்லியாக பணியாற்றி காவல் பணிக்கு திரும்பிய போலீஸாா் விவரங்களை தொகுத்து அனுப்புமாறும் அபய்குமாா் சிங் அறிவுறுத்தியுள்ளாா்.