சென்னை

8,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை

சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Din

சென்னை: சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பம்மலில் உள்ள சங்கரா கண் மருத்துவமனை மற்றும் ஆா்இசி அறக்கட்டளை இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு இலவச கண்புரை சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக ஆா்இசி அறக்கட்டளை ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் திங்கள்கிழமை சென்னையில் கையெழுத்தானது. இதில், ஆா்இசி அறக்கட்டளை இயக்குநா் நாராயணன் திருப்பதி, தலைமை திட்ட மேலாளா் தாரா ரமேஷ், சங்கரா கண் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் வி.சங்கா் ஆகியோா் கையெழுத்திட்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT