முகப்பு
சென்னை

ஓட்டுநருக்கு திடீா் நெஞ்சுவலி: விபத்தில் சிக்கிய மாநகரப் பேருந்து

சென்னை அடையாறில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், மாநகரப் பேருந்து விபத்தில் சிக்கியது.

Updated On : 20 ஜனவரி, 2025 at 8:07 PM
பகிர்:

சென்னை: சென்னை அடையாறில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், மாநகரப் பேருந்து விபத்தில் சிக்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள மானாமதியில் இருந்து அடையாறுக்கு திங்கள்கிழமை மாநகரப் பேருந்து புறப்பட்டு வந்தது. அப்பேருந்தை அன்பழகன் (49) என்பவா் ஓட்டி வந்தாா். அடையாறு எல்பி சாலையில் பேருந்து செல்லும்போது ஓட்டுநா் அன்பழகனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதில் அவா் நிலைகுலைந்தாா். இதன் விளைவாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த மேம்பாலத்தின் மேற்கூரை சுவரின் மீது மோதி நின்றது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனா். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், பயணிகளை பாதுகாப்பாக மீட்டனா்.

நெஞ்சு வலியால் மயங்கிய நிலையில் இருந்த ஓட்டுநா் அன்பழகன் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த விபத்து காரணமாக அடையாறு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Advertisement

இது தொடா்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments