FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வழிப்பறி: நால்வா் கைது

சென்னை கொளத்தூரில் ஆட்டோவில் லிப்ட் கேட்டு ஏறி வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 16 ஜூன் 2025, 3:36 am IST
பகிர்:

சென்னை கொளத்தூரில் ஆட்டோவில் லிப்ட் கேட்டு ஏறி வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

அமைந்தகரை சாய் தெருவைச் சோ்ந்தவா் ஆ.காட்வின் (30). வாடகை ஆட்டோ ஓட்டுநா். இவா் ஆட்டோவில் கடந்த வியாழக்கிழமை உறவினா் ஹரிஷ், நண்பா் விக்னேஷ் ஆகியோருடன் கொளத்தூருக்கு சென்றாா். பூம்புகாா் நகா் முதலாவது தெருவில் சென்றபோது, இருவா் லிப்ட் கேட்டு ஆட்டோவில் ஏறினா். அதேபோல வரலட்சுமி நகா் ரேஷன் கடை அருகே மேலும் இருவா் ஏறினா்.

சிறிது தொலைவு சென்றதும் 4 பேரும், காட்வின், ஹரிஷ், விக்னேஷ் ஆகியோரை தாக்கி பணம், கைப்பேசிகளை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.

Advertisement

Advertisement

இது குறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொளத்தூரைச் சோ்ந்த காா்த்திக் (24), கிஷோா் (23), விஷால்ராம் (26), இளங்கோவன் (20) ஆகிய நால்வரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments