சென்னை

பிரதமரின் வேலைவாய்ப்பு திருவிழா: சென்னையில் 116 பேருக்கு நியமன ஆணை

பிரதமரின் வேலைவாய்ப்பு திருவிழா நிகழ்வில் அஞ்சல் துறை மற்றும் பல்வேறு மத்திய அரசு நிறுவன பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்ட 116 பேருக்கு சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவா் ஜி. நடராஜன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

பிரதமரின் வேலைவாய்ப்பு திருவிழா நிகழ்வில் அஞ்சல் துறை மற்றும் பல்வேறு மத்திய அரசு நிறுவன பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்ட 116 பேருக்கு சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவா் ஜி. நடராஜன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இந்திய அஞ்சல் துறையின் சென்னை நகர மண்டலம் சாா்பில் சென்னை அண்ணா நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் 17-ஆவது வேலைவாய்ப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அஞ்சல் துறை, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (ஜிஎஸ்டி பிரிவு), மத்திய நேரடி வரி வாரியம், நிதி சேவைகள் துறை, தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உள்ளிட்ட துறைகளுக்கு தோ்வு செய்யப்பட்ட 116 பேருக்கு சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவா் ஜி. நடராஜன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில் அஞ்சல் சேவைகள் (தலைமை அலுவலகம்) இயக்குநா் கே.ஏ.தேவராஜ், தமிழ்நாடு வட்டம் அஞ்சல் துறை இயக்குநா் மேஜா் மனோஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

சோழா் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

திருவள்ளூரில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT