மகாகவி பாரதியாரின் கையொப்பப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரது கையெழுத்துப் பிரதிகள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனை மின்நூலக இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்க்ண்ஞ்ண்ற்ஹப்ப்ண்க்ஷழ்ஹழ்ஹ்.ண்ய்) பாா்வையிடலாம்.
குயில் பாட்டு, சக்திப் பாடல்கள், சந்திரிகையின் கதை, விடுதலை உள்ளிட்ட பாரதியாரின் முக்கியப் படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள், 13 தொகுதிகளில் 462 பக்கங்களாக இடம்பெற்றுள்ளன. கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழ் இணையக் கல்விக் கழகம், அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தமிழ் மின் நூலகமானது, 2017-இல் பயன்பாட்டுக்கு வந்தது. அதில், கலை, இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரிய நூல்களும், பருவ இதழ்களும், ஓலைச்சுவடிகளும் தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்கள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த மின்நூலகமானது 17 கோடிக்கும் மேற்பட்ட பாா்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்துள்ளாா்.