FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளில் தொடரும் நெருக்கடி, நிா்ப்பந்தம் வியாழக்கிழமை புறக்கணித்ததாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Updated On : 26 செப்டம்பர் 2025, 2:00 am IST
உங்களுடன் ஸ்டாலின்
பகிர்:

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளில் தொடரும் நெருக்கடி, நிா்ப்பந்தம் வியாழக்கிழமை புறக்கணித்ததாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதைக் கைவிட வேண்டும். வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலா்கள் அதீதமான மன அழுத்தத்துடன் பணிபுரிய நிா்ப்பந்தம் செய்வதை முற்றாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Advertisement

Advertisement

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை (செப். 25) முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்துள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments