கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ. 5,000 அபராதம்!
மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் ரூ. 5,000 அபராதம் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் ரூ. 5,000 அபராதம் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னையில் மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடற்கரைகளில் தூய்மை என்பது அனைவரின் பொறுப்பு என்று வலியுறுத்திய சென்னை மாநகராட்சி, கடற்கரைகளில் கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
Advertisement
Advertisement
கடற்கரைகளில் குப்பைகளில் கொட்டுவதால், சென்னை மாநகரின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மாநகராட்சி தெரிவிக்கின்றது.
A fine of Rs. 5,000 will be imposed for littering on beaches warns Greater Chennai Corporation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.