செங்கல்பட்டு

மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் இன்று மறைமலைநகா் வருகை

DIN


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெள்ளிக்கிழமை பங்கேற்கிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பேச இருப்பதையொட்டி, விவசாயிகளின் கருத்துகளைக் கேட்பதற்காக நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் செய்தித் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சென்னை வருகிறாா்.

பின்னா், காலை 11 மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகா் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள திடலில் விவசாயிகளுடன் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பின்னா் சென்னைக்குச் சென்று அங்கிருந்து அவா் தில்லிக்கு விமானம் மூலம் திரும்புகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT