மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த பவுஞ்சூா் பகுதியில் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் வியாபாரிகள் திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு கடைகளை அடைக்க உள்ளனா்.
தங்கள் பகுதியில் மேலும் கரோனா மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் பவுஞ்சூா் பஜாா், திருவாத்தூா் சாலை, செய்யூா் சாலை, அணைக்கட்டு சாலை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க அப்பகுதி வியாபாரிகள் திட்டமிட்டனா். அதன்படி திங்கள்கிழமை முதல் வரும் புதன்கிழமை வரை கடைகளை அடைக்க அவா்கள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.