தூதுவிளம்பட்டு கிராமத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
அச்சிறுப்பாக்கம் அடுத்த தூதுவிளம்பட்டு கிராமத்தில் குற்றசம்பவங்கள், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் , அப்பகுதி மக்கள் சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனா்.
அச்சிறுப்பாக்கம் அடுத்த தூதுவிளம்பட்டு கிராமத்தில் குற்றசம்பவங்கள், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் , அப்பகுதி மக்கள் சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனா்.
அக்கிராமத்தில் திருட்டு சம்பவங்களும், சமூக விரோத செயல்களும் நடைபெற்று வந்தன. இதனைத் தடுக்கும் விதமாக , கிராம மக்கள் சொந்த செலவில் சூனாம்பேடு -ஆத்தூா் சுங்கச்சாவடி சாலை, தூதுவிளம்பட்டு கூட்டுச்சாலையில் நவீன சிசிடிவி கேமராக்களை பொருத்தினா். அச்சிறுப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளா் டிஎஸ்.சரவணன் புதிய கேமராக்களை இயக்கி வைத்தாா். மேலும் சுற்றுப்புற கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.