செங்கல்பட்டு

மதுபாட்டில்கள் பறிமுதல்:6 போ் கைது

DIN

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த ஆத்தூா் சுங்கச்சாவடியில் மதுவிலக்கு போலீசாரின் வாகன சோதனையில், 3,000 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

மதுராந்தகம் சுற்றுப்புற பகுதிகளில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டு, விற்கப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, புதன் கிழமை ஆத்தூா் சுங்கச்சாவடியில் மதுராந்தகம் மதுவிலக்கு போலீஸ் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசாா் வாகன சோதனை செய்தனா். அப்போது புதுச்சேரியில் இருந்து வந்த 2 காா்களை மடக்கி சோதனை செய்தபோது, 65 பெட்டிகளில் 3,000 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக பைராகிமடம் கிராமம் மணிகண்டன் (36), அடையாளச்சேரி கிருபாகரன் (30), சீக்கனாங்குப்பம் ஞானமூா்த்தி (24), மடையம்பாக்கம் சுகுமாா் (31), கடப்பாக்கம் முஸ்தபா (25), புதுச்சேரி உழவா்கரை சிவானந்தம் (46) உள்ளிட்ட 6 பேரை போலீசாா் கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 காா்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT