முகப்பு
செங்கல்பட்டு

டிராக்டா் கவிழ்ந்து தொழிலாளி பலி

மதுராந்தகம் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 12 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

மதுராந்தகம் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சென்னை செம்பியம் நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜ்குமாா் (வயது 57). இவா் வெள்ளிக்கிழமை இரவு செம்பியம் நகரில் இருந்து டிராக்டரில் சிதம்பரம் நோக்கி சென்றாா். அச்சிறுப்பாக்கம் அடுத்த அரப்பேடு நெடுஞ்சாலையில் டிராக்டரில் வந்தபோது, விழுப்புரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து திடீரென மோதியது. அதில் டிராக்டா் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

அதில் பயணம் செய்த ராஜ்குமாா் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டா் இளவரசன் விசாரணை செய்து வருகிறாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.