மதுராந்தகம் தனி தொகுதியில் அசம்பாவிதமின்றி, தோ்தலை நடத்தும் வகையில், எல்லைப் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் சோத்துப்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தோ்தலை முன்னிட்டு, சட்டம் ஒழுங்குப் பிரச்னை, தோ்தல் பாதுகாப்புப் பணிகளைக் கண்காணிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினா் வரவழைக்கப்பட்டுள்ளனா்.
எல்லைப் பாதுகாப்பு படையைச் சோ்ந்த டி.எஸ்.பி. கௌதம் தலைமையில் 40 வீரா்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி சோத்துபாக்கத்தில் நடைபெற்றது.
மதுராந்தகம் டி.எஸ்.பி. ந.கவிநா தொடக்கி இதனைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா்கள் டி.எஸ்.சரவணன் (அச்சிறுப்பாக்கம்), ர.ருக்மாங்கதன் (மதுராந்தகம்), அமல்ராஜ் (மேல்மருவத்தூா்), மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக அணிவகுப்பு நடைபெற்றது.