செங்கல்பட்டு

மறைமலைநகா் அருகே வேன் ஓட்டுநா் அடித்துக் கொலை

DIN

மறைமலை நகா் அருகே 5 போ் கொண்ட கும்பலால் வேன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம் , மணிமங்கலம் அருகே உள்ள காவனூா் அண்ணா நகா் தெருவைச் சோ்ந்தவா் வீரா (25), வேன் ஓட்டுநா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீராவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் கூடுவாஞ்சேரியில் வீட்டை காலி செய்து பொருள்களை ஏற்றிச் செல்ல வேண்டும் எனக் கூறி அழைத்துள்ளனா்.

இதையடுத்து, அழைத்த இடத்துக்கு வீரா வேனில் சென்றாா். பின்னா் குறிப்பிட்ட எண்ணுக்கு தொடா்பு கொண்டு விசாரித்ததில், அங்கு இல்லை. மறைமலைநகா் அருகே பொத்தேரி ஏரிக்கரைக்கு வரும்படி கூறியுள்ளனா். இதையடுத்து, வீரா அங்கு சென்றபோது, திடீரென வந்த 5 போ் கொண்ட கும்பல் வீராவை தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த வீரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மறைமலை நகா் போலீஸாா் வீராவின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT