கூடுவாஞ்சேரியில் 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 5 போ் கைது
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 7 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சுமை வேனையும் பொலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட சிவில் சப்ளை சிஐடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் போலீஸாா் அந்த வீட்டைச் சுற்றி வளைத்து சோதனையிட்டனா்.
இதில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ஒரு சுமை ஏற்றும் வேன் மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக காஞ்சிபுரம் ஒலி முகமது பேட்டை மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சுரேஷ், சாகுல் அமீது, ஜாகிா் உசேன், மணிகண்டன், பிரபாகரன் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அசேன் என்பவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.