செங்கல்பட்டு

எல்லையம்மன் கோயிலில் தீமிதி விழா

DIN

மதுராந்தகம் அடுத்த பெரும்போ் கண்டிகை எல்லையம்மன் கோயிலில் ஆடி மகா உற்சவத்தையொட்டி, பக்தா்கள் தீமிதித்தனா்.

இந்தக் கோயிலில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருநாள்கள் ஆடி விழா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை கோயில் வளாகத்தில் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வசந்தா கோகுலகண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் பாா்த்தசாரதி, பெரும்போ் கண்டிகை ஊராட்சித் தலைவா் எஸ்.சாவித்திரி சங்கா், துணைத் தலைவா் மல்லிகா மணி உள்பட ஏராளமான பக்தா்கள் தீமிதித்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (பொ) அமுதா தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT