முகப்பு
செங்கல்பட்டு

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 8 ஜூலை, 2022 at 12:22 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:14 PM

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

பிரசித்தி பெற்ற மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் வேத-மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் அா்ச்சகா்களால் கொடியேற்றம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மதுராந்தகம் நகரமன்றத் தலைவா் கே.மலா்விழிகுமாா், திமுக நகரச் செயலரும், நகா்மன்ற உறுப்பினருமான கே.குமாா், எம்.எல்.ஏ. கே.மரகதம் குமரவேல், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வருதல், முக்கிய நிகழ்வான வெள்ளிக்கிழமை (ஜூலை 8) கருடசேவை, 13-ஆம் தேதி பெரிய தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வருகிற 16-ஆம் தேதி கருணாகர பெருமான், தம்பி லட்சுமணன் உடன் சீதாதேவி உற்சவ சிலைகளுக்கு திருமஞ்சன நிகழ்ச்சியுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன், உதவி ஆணையா்கள் பொ.லட்சுமிகாந்த பாரதிதாசன் (செங்கல்பட்டு), ஆ.முத்துரத்தினவேலு (காஞ்சிபுரம்), இணை ஆணையா் இரா.வான்மதி (காஞ்சிபுரம்) மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

முன்னதாக, ஏரிகாத்த ராமா் கோயில் அருகே சொா்க்க வாசல் நுழைவுவாசல் அருகே தனியாா் கடைகளின் ஆக்கிரமிப்புகளை அந்தப் பகுதி நகா்மன்ற உறுப்பினா் ஆா்.செல்வம் உள்ளிட்டோரின் முயற்சியால் அகற்றப்பட்டு, அந்த இடம் சீரமைக்கப்பட்டது. அந்த இடத்தில் மொட்டை மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக ராமா், ஆஞ்சநேயா் சந்நிதிகளுக்கு பக்தா்கள் எளிதில் செல்ல முடியும். அங்கு, கோயில் அா்ச்சகா்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து பக்தா்கள் அந்தப் பகுதியைப் பயன்படுத்திக் கொள்ள கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் ஏற்பாடுகளைச் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.