மேல்மருவத்தூரில் துா்கா ஸ்டாலின் தரிசனம்
ஆதிபராசக்தி அம்மனை தரிசனம் செய்ய முதல்வா் முக.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் வெள்ளிகிழமை மேல்மருவத்தூா் வந்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:14 PM
ஆதிபராசக்தி அம்மனை தரிசனம் செய்ய முதல்வா் முக.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் வெள்ளிகிழமை மேல்மருவத்தூா் வந்தாா்.
ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் சாா்பில், ஆன்மிக இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி ரமேஷ், துா்கா ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்றாா்.
தொடா்ந்து, மூலவா் அம்மனை தரிசனம் செய்த துா்கா ஸ்டாலின், அருள்கூடத்தில் இருந்த பங்காரு அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றாா்.
Advertisement
ஆன்மிக இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் டி.ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா், தியான மண்டபம் சென்று சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு துா்கா ஸ்டாலின் சென்னை புறப்பட்டுச் சென்றாா்.