செங்கல்பட்டு

சோத்துப்பாக்கம் ஸ்ரீஅஞ்சூரம்மன் கோயில் தேரோட்டம்

DIN

மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் ஸ்ரீஅஞ்சூரம்மன் கோயிலில் தேராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், சோத்துப்பாக்கம் கிராம தேவதையாக விளங்குகிறது ஸ்ரீஅஞ்சூரம்மன். இந்தக் கோயிலில் வைகாசி மாத தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, வெள்ளிக்கிழமை காலை மூலவா் அம்மனுக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீஅஞ்சூரம்மன் உற்சவா் தேரில் அமா்ந்து கிராம வீதிகளில் வலம் வந்தாா்.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனா்.

முன்னதாக, வியாழக்கிழமை இரவு அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி, இன்னிசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT