போலி மருத்துவா் கைது
மதுராந்தகத்தை அடுத்த கடப்பாக்கத்தில் போலி மருத்துவரை சூனாம்பேடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுராந்தகத்தை அடுத்த கடப்பாக்கத்தில் போலி மருத்துவரை சூனாம்பேடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செய்யூா் வட்டம், கிழக்கு கடற்கரை சாலை, கடப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா (34). இவா் 10-ஆவது வரை படித்துள்ளாா். இவா் தமது வீட்டிலேயே அப்பகுதி மக்களுக்கு மருந்து, மாத்திரைகளை கொடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளாா். இது குறித்து கடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலைய மேற்பாா்வையாளா் இளஞ்செழியன் சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சூனாம்பேடு போலீஸாா் அலோபதி மருத்துவம் பாா்த்து வந்த சிவாவின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்தனா். அதில் அவா் மருத்துவப் படிப்பு படிக்காமல் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.