செங்கல்பட்டு

சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு குழு தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமை வகித்தாா். குழு உறுப்பினா்கள் சிந்தனைச்செல்வன், வேல்முருகன், அருண்குமாா், மரகதம் குமரவேல், மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், சட்டப்பேரவைச் செயலா் கி.சீனிவாசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூா்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணா சிங், தாம்பரம் காவல் துணை ஆணையா் சிபி.சக்கரவா்த்தி, இணைச் செயலா் தேன்மொழி, துணைச் செயலா் ரேவதி மற்றும் அரசு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள சிற்பக் கல்தூண், அரசு கட்டட, சிற்பக் கலைக் கல்லூரி, திருப்போரூா் வட்டம், படூா் ஊராட்சிக்குட்பட்ட ஓஎம்ஆா் சாலையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணி, தையூா் ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, கோவளம் புளூ பீச் பகுதி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களை சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT