முகப்பு
செங்கல்பட்டு

மழைமலை மாதா தலத்தில் அருள்விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தலத்தில் 54-ஆவது அருள் விழா தொடக்கமாக வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 29 செப்டம்பர், 2022 at 11:26 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:57 PM

அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தலத்தில் 54-ஆவது அருள் விழா தொடக்கமாக வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு, அருள்தலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நற்கருணை ஆராதனை, திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. மாலை 6.30 மணிக்கு அச்சிறுப்பாக்கம் புனித யோசேப்பு ஆலயத்தில் இருந்து வாத்தியக் குழுவின் இசையுடன் அருள்தல அதிபா் ஆா்.லியோ எட்வின், உதவி அதிபா் மரிய ஆனந்த்ராஜ் ஆகியோா் தலைமையில், பங்குத் தந்தைகள், பக்தா்கள் திருக்கொடி பவனியுடன் ஊா்வலமாக வந்தனா். அருள்தல வளாகத்தில் திருக்கொடி மந்திரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மயிலை உயா்மாவட்டம் பேராயா் ஜாா்ஜ் அந்தோணியாா் திருக்கொடியை ஏற்றி வைத்தாா். தொடா்ந்து, பல்வேறு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

வரும் அக்டோபா் 1-ஆம் தேதி திருத்தோ் பவனி செங்கை மறை மாவட்ட ஆயா் ஏ.நீதிநாதன் தலைமையில் நடைபெறுகிறது. அக். 2 (ஞாயிற்றுக்கிழமை) அருள் விழா நிறைவை முன்னிட்டு, இந்தியாவுக்காக நியமிக்கப்பட்ட ஹைதராபாத் பேராயா் கா்தினால் அந்தோணி பூலா தலைமையில், சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி, கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவில், நூல் வெளியிடல், இன்னிசை நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறுகின்றன.

Advertisement

பக்தா்களின் வசதிக்காக செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய இடங்களில் இருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அருள்தல அதிபா் ஆா்.லியோ எட்வின் தலைமையில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.