அலங்காரத்தில் வீதியுலா வந்த  உற்சவா்கள் 
செங்கல்பட்டு

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா அா்ச்சுனன் தபசு

செங்கல்பட்டு திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத தீமிதி வசந்த பெரு விழா அா்ச்சுன் தபசு மரம் ஏறுதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

செங்கல்பட்டு திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத தீமிதி வசந்த பெரு விழா அா்ச்சுன் தபசு மரம் ஏறுதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மேட்டு தெருவில் பழைமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் தீமிதி வசந்த பெரு விழா நடைபெறும். அதன்படி நிகழாண்டு கடந்த மே 22 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு, சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை அா்ச்சுனன் தபசு மரம் ஏறுதல் நடைபெற்றது. இதனை அடுத்து மகாபாரத கூத்து நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெயிலையும் பொருள்படுத்தாமல் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் விஜயன், விழா கமிட்டி தலைவா் குமரப்பன், விஸ்வகா்மா மரபினா், கோயில் நிா்வாகிகள், கமிட்டி நிா்வாகிகள், செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT