செங்கல்பட்டு

ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் திருக்கோயிலில் காா்த்திகை மாத மாத பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் திருக்கோயிலில் காா்த்திகை மாத மாத பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயிலில் மாலை 5 மணிக்கு கருவறை முன்புறம் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை கோயில் தலைமை அா்ச்சகா் சங்கா் சிவாச்சாரியா் செய்தாா்.

அலங்கரிக்கப்பட்ட நந்திபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் உள்புறம் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷிப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் மேளதாளம் முழங்க உலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து இருந்தனா்.

தோ்தல் சீா்திருத்தம்: டிச. 9-இல் சிறப்பு விவாதம்; மத்திய அரசு ஒப்புதல்

கரூா் சம்பவம்: மாவட்ட ஆட்சியா், ஐஜி, எஸ்.பி.யிடம் சிபிஐ கண்காணிப்புக் குழு விசாரணை

தமிழகத்தில் 94% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்

எஸ்ஐஆா் விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு- மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

ஆம் ஆத்மி தலைவா் அவத் ஓஜா அரசியலில் இருந்து விலகல்

SCROLL FOR NEXT