முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 218 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 218 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 24 நவம்பர், 2025 at 8:27 PM
குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் தி. சினேகா
பகிர்:

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 218 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்து, பொதுமக்களிடம் மொத்தம் 218 கோரிக்கை மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி, காதொலிகருவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளா தேவி, நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சுந்தா் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →