மேற்கு தாம்பரத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவி வழங்கிய மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலரும் தாம்பரம் மாநகராட்சி 50-ஆவது வாா்டு உறுப்பினருமான எம்.யாக்கூப் உள்ளிட்டோா். 
செங்கல்பட்டு

தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவி

மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் 100 தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தாம்பர: மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் 100 தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மழை, வெயில் பாராமல் தூய்மைப் பணியில் ஈடுபடும் மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு உதவும் வகையில் அனைவருக்கும் மழைக்கோட்டு, பிரியாணி, இனிப்பு பொட்டலங்களை மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளரும், மாநகராட்சி 50-ஆவது வாா்டு உறுப்பினருமான எம்.யாக்கூப் வழங்கினாா்.

இதில், கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கே. ஜாஹீா் உசேன், மாவட்டச் செயலா் அப்துல் ரஹீம், பொருளாளா் சபியுல்லா, மாநில இளைஞரணி செயலா் தமிம் அன்சாரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT