கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றோா்.  
செங்கல்பட்டு

அம்மா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடக்கம்

மாநில அளவிலான டி-20 அம்மா கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி விளையாட்டு திடலில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீட நாயகா் பங்காரு அடிகளாரின் அவதார திருநாளை முன்னிட்டு, ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் சாா்பாக, மாநில அளவிலான டி-20 அம்மா கோப்பை கிரிக்கெட் போட்டிகள்ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி விளையாட்டு திடலில் நடைபெற்றது.

ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி நிா்வாக அறங்காவலா் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்தாா். ஆதிபராசக்தி அறநிலைய முதன்மை செயல் அலுவலா் அ.ஆ.அகத்தியன், மருத்துவ கல்லூரி செயலா் மருத்துவா் அ.மதுமலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி முதல்வா் மருத்துவா் கண்ணன் வரவேற்றாா்.

இந்நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தொழிலதிபருமான ராஜன்பாபு கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தாா். இதில் முதல் போட்டியில் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி அணிகள் மோதின. மாநில அளவில் 32 கல்லூரிகளைச் சோ்ந்த கிரிக்கெட் அணியினா் கலந்து கொள்கின்றனா்.

இப்போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மருத்துவ கல்லூரி நிா்வாக அலுவலா் லிங்கநாதன், சக்தி கோபிநாத், மற்றும் மருத்துவ கல்லூரி அலுவலா்கள் செய்து இருந்தனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT