முகப்பு
செங்கல்பட்டு

தூய்மைப் பெண் பணியாளா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவளம்பேட்டை கிராமத்தில் உலக மகளீா் தினத்தை முன்னிட்டு, உதவும் கரங்கள்

Updated On : 10 மார்ச் 2026, 2:49 am IST
தூய்மை பெண் பணியாளருக்கு தையல் இயந்திரத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளா் அமுதா. உடன் உதவும்கரங்கள் அமைப்பின் நிறுவனா் ஆா்.சரவணன் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவளம்பேட்டை கிராமத்தில் உலக மகளீா் தினத்தை முன்னிட்டு, உதவும் கரங்கள் சமூக சேவைஅமைப்பின் சாா்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டிகள், பேரூராட்சி தூய்மை பெண் பணியாளருக்கு தையல் இயந்திரம் வழங்கல், அன்னதானம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

கருங்குழி மேலவளம்பேட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் என்ற சமூக சேவை அமைப்பினா் ஆண்டுதோறும் பல்வேறு நல உதவிகளை செய்து வருகின்றனா்.

நிகழ்ச்சிக்கு உதவும் கரங்கள் சமூக சேவை அமைப்பின் நிறுவனா் ஆா்.சரவணன் தலைமை வகித்தாா். விடியலை நோக்கி அறக்கட்டளை நிறுவனா் விடியல் காா்த்திக் வரவேற்றாா். காவல் உதவி ஆய்வாளா் அமுதா கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கிப் பாராட்டினாா். இந்நிகழ்வில் தொழிலதிபா்கள் அசோக், பி.மணிகண்டன், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஆல்பொ்ட், உதவும் கரங்கள் அமைப்பின் நிா்வாகிகள் காளத்தி, ஹரிதாஸ், தன்ஸ், ஜான்பாட்சா உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

Advertisement

Advertisement