3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி
சென்னை திருவேற்காட்டில் தாய், மூன்று குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவேற்காடு அருகே உள்ள மேல்அயனப்பாக்கம் எட்டீஸ்வரன்
சென்னை திருவேற்காட்டில் தாய், மூன்று குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவேற்காடு அருகே உள்ள மேல்அயனப்பாக்கம் எட்டீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவருக்கு இந்து (9), லட்சுமி (8) என்ற 2 மகள்களும், சந்தோஷ் (6) என்ற மகனும் உள்ளனர். சுப்புலட்சுமி கணவரைப் பிரிந்து சகோதரனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் திங்கள்கிழமை சுப்புலட்சுமி திடீரென விஷத்தை தண்ணீரில் கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் குடித்தார். இதில் 4 பேரும் மயங்கி விழுந்தனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள், தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவேற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.