முகப்பு
சென்னை

வியாபாரி வீட்டில் 87 பவுன் நகை திருட்டு

சென்னை வண்ணாரப்பேட்டையில் இரும்பு வியாபாரி வீட்டில் 87 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

Updated On : 15 மே, 2018 at 2:52 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

சென்னை வண்ணாரப்பேட்டையில் இரும்பு வியாபாரி வீட்டில் 87 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
வண்ணாரப்பேட்டை தேனாம்பாள் நகரைச் சேர்ந்தவர் அருணாச்சலம், இரும்பு வியாபாரி. இவர் திங்கள்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு, கப்பல் போலு தெருவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். பின்னர் வீடு திரும்பி வந்து பார்த்த போது உள்ளே பீரோவில் வைத்திருந்த 87 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.