சென்னை

100 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை

DIN


சென்னை வேளச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் 100 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் அமர் அகர்வால் தெரிவித்தார். 
மருத்துவமனையை நடிகை கீர்த்தி சுரேஷ் சனிக்கிழமை திறந்து வைத்தார். மருத்துவமனைகளின் தலைவர் அமர் அகர்வால், செல்லிடப்பேசி, கணினியை அதிகம் பயன்படுத்துவதால் கண் பிரச்னை ஏற்படுகிறது. இதில், குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 
இதைத் தடுக்க கணினி, செல்லிடப்பேசியில் தொடர்ந்து அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். 
வேளச்சேரியில் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் வகையில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 100 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்யப்பட உள்ளது என்றார்.
இந்த விழாவில், கண் தானம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர் அஷார் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT