சென்னை

சென்னை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு செப். 14-இல் இலக்கியப் போட்டிகள்

DIN

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் எழும்பூர் மாநில அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. 
தலைப்புகள் போட்டி தொடங்கும்போது கொடுக்கப்படும். போட்டி முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ. 7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்லூரி முதல்வர், துறைத் தலைவரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று போட்டி நடைபெறும் நாளன்று தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும்.
போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT