சென்னை

வழிப்பறியில் ஈடுபட்டவர்களை போலீஸார் விரட்டிப் பிடிப்பு

DIN


எண்ணூர் விரைவு சாலையில் சரக்கு பெட்டக லாரி ஓட்டுநர்களை கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த இருவரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.
சென்னை துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய சரக்குப் பெட்டக லாரிகள் எண்ணூர் விரைவுச் சாலையில் வரிசையாக நிற்பது வழக்கம். வட மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தினேஷ் (40),திருச்சினாங்குப்பம் அருகே எண்ணூர் விரைவுச் சாலையின் ஓரம் லாரியை நிறுத்திவிட்டு திங்கள்கிழமை நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு நபர்கள், திடீரென தினேஷை கத்தியால்தாக்கி அவர் வைத்திருந்த செல்லிடப்பேசி, பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
அப்போது அங்கு ரோந்து வந்த போலீஸாரிடம், தினேஷ் வழிப்பறி குறித்த தகவலை தெரிவித்தார். உடனே போலீஸார் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அதே நபர்கள், அங்கு நின்றுக் கொண்டிருந்த மற்றொரு சரக்கு பெட்டக லாரியின் ஓட்டுநரான தேனியைச் சேர்ந்த முருகேசனை (29) கத்தியால் குத்தி, வழிப்பறியில் ஈடுபடுவதை போலீஸார் பார்த்தனர்.
அந்த இரு நபர்களும், போலீஸாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டும் போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், திருவொற்றியூர் நேதாஜி நகரைச் சேர்ந்த ராம்குமார் (29) என்பதும், தப்பியோடியது அதேப் பகுதியைச் சேர்ந்த மதன் (23) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராம்குமாரை கைது செய்தனர். தப்பியோடிய மதனும் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

போடி அருகே வனப் பகுதியில் காட்டுத் தீ

அருளால் இறைவனை அறிய வேண்டும்: சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா

மேகாலயாவில் ரோல்பால் போட்டி தமிழக அணி வீரா்களுக்கு வழியனுப்பு விழா

சாலை விபத்தில் மதுரை திமுக நிா்வாகி பலி

SCROLL FOR NEXT