சென்னை

2 மாநகராட்சி பள்ளிகள் தத்தெடுப்பு

DIN


அமெரிக்க தமிழ் சங்கம் மற்றும் ஸ்ரீவாரி அறக்கட்டளை இணைந்து சென்னை மாநகராட்சி பள்ளிகள் இரண்டை தத்தெடுத்துள்ளன.
சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா முன்னிலையில், சென்னை மயிலை வீரபெருமாள் கோயில் தெரு மாநகராட்சி தொடக்கப் பள்ளி, காரணீஸ்வரர் பகோடா தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியன தத்தெடுக்கப்பட்டன. இதன்மூலம் அப்பள்ளிகளின் வகுப்பறைகளை மேம்படுத்துதல், கணினி கல்வி தரத்தை உயர்த்துதல், ஆசிரியர்களின் திறனை உயர்த்துதல், மாணவியருக்கு சானிட்டரி நாப்கின் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வி. சரோஜா, அரசுப் பள்ளிகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவில் தத்து எடுக்க முன்வர வேண்டும். 
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவில் பங்கேற்று தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை பெற்றுத்தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
விழாவுக்கு மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ் தலைமை வகித்தார். அதிமுக எம்.பி.க்கள் வ.மைத்ரேயன், ஜெ.ஜெயவர்தன், எழுத்தாளர் சிவசங்கரி, அமெரிக்கா தமிழ் சங்கத் தலைவர் பிரகாஷ் எம்.ஸ்வாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT