சென்னை

மின் திருட்டு: ரூ.65 கோடி அபராதம் வசூல்

DIN


கடந்த ஆண்டில் மாநிலம் முழுவதும் 16,876 மின் திருட்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டு, அதற்கான இழப்பீட்டு தொகையாக ரூ.65 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள அமலாக்கப்பிரிவு மூலம்  வீடுகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள்
ஆகியவற்றில் மின் திருட்டு நிகழ்வுகள் நடைபெறுவதைத் தடுப்பதற்கான  ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கடந்த ஆண்டு மட்டும் 16,876 மின் திருட்டு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பேரில் இழப்பீட்டுத்தொகையாக ரூ.65 கோடி வசூலிக்கப்பட்டது.  நிகழாண்டு ஜனவரியை எடுத்துக் கொண்டால் 509 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.3.9 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT