சென்னை

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

DIN


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
சென்னை நெற்குன்றம் சி.கே.மாணிக்கம் சாலை பகுதியை சேர்ந்தவர் சயீத் கலில் (36). நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்ட சயீத் கலில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மருத்துவமனையின் மேல் தளத்தில் இருந்து குதித்ததாகத் தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சயீத் கலில் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. போதைப் பழக்கத்தை கைவிடுவதற்காக அளிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு அவர் ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது.
குடியை மறக்க இயலாமல் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT