சென்னை

ரயிலில் கடத்தி வரப்பட்ட24 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

DIN

சென்னைக்கு ரயிலில் 24 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கொல்கத்தாவில் இருந்து கோரமண்டல் விரைவு ரயில் திங்கள்கிழமை வந்தது.

அந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த இரு இளைஞா்களை ரயில்வே போலீஸாா் பிடித்து விசாரணை செய்தனா்.

இதில், இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனராம். இதையடுத்து போலீஸாா், அவா்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டதில் அந்த பையில் இருந்த 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா்கள், உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த ஜாகீா் (32), அப்சா் அலி (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT