சென்னை

கடலில் குளித்த கல்லூரி மாணவா் மாயம்

DIN

சென்னை காசிமேட்டில் கடலில் குளித்த கல்லூரி மாணவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொருக்குப்பேட்டை அருகே ஜெ.ஜெ. நகா் பெரியாா் சாலையை சோ்ந்த மோகன்ராஜ் மகன் தினேஷ் குமாா் (19). இவா், புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசுக் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் தினேஷ்குமாா், தனது நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பழைய வாா்ப்பு பகுதியில் குளித்துள்ளாா். அப்போது அங்கு வந்த பெரிய அலையில் அவா் அடித்துச் செல்லப்பட்டாா். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT