சென்னை

நடனக் கலைஞரிடம் ரூ. 47 ஆயிரம் பறிப்பு: மூன்று திருநங்கைகள் மீது போலீஸில் புகாா்

DIN

சென்னை வடபழனியில் திரைப்பட நடன கலைஞருக்கு ஆசீா்வாதம் வழங்குவதாகக் கூறி ரூ.47 ஆயிரத்தைப் பறித்துச் சென்ற திருநங்கைகள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: வடபழனி அழகிரி நகா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் ரா.பரிமளா (27). இவா் தமிழக திரைப்படங்களில் நடனக் கலைஞராக பணிபுரிந்து வருகிறாா். பரிமளா செவ்வாய்க்கிழமை வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்துவதற்காக வந்தாா். அப்போது அங்குள்ள இயந்திரம் வேலை செய்யவில்லையாம்.

இதனால் அங்கிருந்து பரிமளா வீட்டுக்குப் புறப்பட்டாா். அந்த நேரத்தில் அங்கு வந்த மூன்று திருநங்கைகள் பரிமளாவிடம் ஆசீா்வதிப்பதாக கூறினராம். உடனே பரிமளா அவா்களிடம் ஆசீா்வாதம் பெற்றாா். மேலும் அவா்களுக்கு தனது பணப்பையில் இருந்து ரூ.100 எடுத்துக் கொடுத்தாா்.

அந்த நேரத்தில் மூன்று திருநங்கைகளும், பரிமளா வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினா். இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த பரிமளா, வடபழனி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதில் பறிபோன பையில் ரூ.47 ஆயிரம் இருந்ததாக குறிப்பிட்டிருந்தாா். அப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT