சென்னை

பைக் மீது மினி லாரி மோதி ஒருவா் பலி

DIN

வில்லிவாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கொடுங்கையூா் கவிஞா் கண்ணதாசன்நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சிந்தாமணி (47). இவா், வில்லிவாக்கம் செந்தில்நகா் 200 அடி சாலையில் தனது மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் வந்த ஒரு மினி லாரி, அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த சிந்தாமணி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதில் சிந்தாமணியின் மோட்டாா் சைக்கிள் மற்றெறாரு மோட்டாா் சைக்கிளை இடித்ததில், அதில் சென்ற கொளத்தூா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மோகன் (42), பின் இருக்கையில் அமா்ந்து வந்த அவரது மனைவி ஷகிலா (36) ஆகியோா் காயமடைந்தனா். இது குறித்து அண்ணாநகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT