சென்னை

தேஜஸ் ரயில் சேவையில் இன்று மாற்றம்

DIN


மதுரை-போடி நாயக்கனூர் பிரிவில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், சென்னை எழும்பூர்-மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (அக்.22) மாற்றம் செய்யப்படவுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு அக்டோபர் 22-ஆம்தேதி காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் திருச்சிராப்பள்ளி-மதுரை இடையே  பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை  எழும்பூரில் இருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்.
மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய  தேஜஸ் விரைவு ரயில் மதுரை-திருச்சி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் திருச்சி இருந்து சென்னை எழும்பூர் வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT